Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் நிற்க கூட முடியாத நிலையில் நடிகர் திலீப்? - அதிர்ச்சி செய்தி

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (18:59 IST)
நடிகை கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நடிகர் திலீப் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.


 

 
கடந்த பிப்ரவரி மாதம் கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட வழக்கில், நடிகர் திலீப் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.  ஜாமீன் கேட்டு அவர் விண்ணப்பித்த மனுவையும் நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்தது. எனவே, தற்போது அவர் கேரளாவில் உள்ள ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
இந்நிலையில், அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.  அவரது காதில் வெர்டைகோ எனப்படும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் அவர் நிற்ககூட முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிகிறது. அவருக்கு சிறை மருத்துவர்கள் போதிய சிகிச்சை அளித்தும் அவரது உடலில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பாதுகாப்பு கருதி, அவரை வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முடியாத சூழ்நிலையில் சிறை நிர்வாகம் இருப்பதாக தெரிகிறது. 
 
அவரின் நீதிமன்ற காவல் நாளையுடன் முடிவடைகிறது. எனவே, அவரது உடல்நிலையை காரணம் காட்டி, அவரின் வழக்கறிஞர் அவருக்கு ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது. 
 
அதே சமயம், அவரை சிறையிலிருந்து வெளியே அழைத்து வர நடத்தப்படும் நாடகம் இதுவென பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த மாதம் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்த விமானி.. அதற்குள் விதி முடிந்தது..!

இன்று ஒரே நாளில் தங்கம் ரூ.200 உயர்வு.. தொடர் ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சி..!

விமானம் விழுந்த இடத்திலும் உயரும் பலி எண்ணிக்கை.. இதுவரை மொத்த பலி 274..!

அடுத்த கட்டுரையில்