Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடிய விடிய போராட்டம்; பாராளுமன்ற வளாகத்தில் கூடாரம் போட்ட எம்.பிக்கள்!

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (08:20 IST)
நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் பாராளுமன்ற வளாகம் முன்பு விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாநிலங்களவையில் நேற்று ஒப்புதலுக்கு கொண்டு வரப்பட்ட விவசாய மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சி எம்பிகள் பேசி வந்தனர். இந்நிலையில் தங்கள் கருத்துகளை ஏற்று மசோதாவில் மாற்றங்கள் செய்யவில்லையென எம்.பிக்கள் புகார் தெரிவித்து பாராளுமன்ற விதிகள் புத்தகத்தை கிழித்து அமளியில் ஈடுபட்டனர்.

அதை தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த எம்பிக்கள் பாராளுமன்ற வளாகத்திலேயே தர்ணாவில் ஈடுபட்டனர். விடிய விடிய பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்திய அவர்கள் சஸ்பெண்டை ரத்து செய்யும் வரை போராடுவோம் என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments