அதானி விமானத்தை பயன்படுத்தினாரா மோடி? – ராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு பாஜக எம்.பி பதில்!

Webdunia
புதன், 8 பிப்ரவரி 2023 (15:35 IST)
அதானியின் விமானத்தை பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதாக ராகுல்காந்தி வைத்த குற்றச்சாட்டினால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு எழுந்தது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வரும் நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அதானி குழும பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. இன்று நடந்த கூட்டத்தொடரில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, பிரதமர் மோடி தனது நண்பர் அதானியை காக்க நினைப்பதாகவும், அதானியின் விமானத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பிரதமர் மோடி சென்று வந்ததாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ALSO READ: பிரதமர் மோடியின் நண்பரின் சொத்து மதிப்பு அதிகரித்ததன் காரணம் என்ன? காங்., தலைவர் கேள்வி

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ளது. பிரதமர் குறித்து அவதூறு பரப்புவதாக ராகுல்காந்திக்கு கண்டனம் தெரிவித்த பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே மக்களவையில் இன்று உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதானியின் தனி விமானத்தை பிரதமர் மோடி பயன்படுத்தினார் என்று யாராவது நிரூபித்தால் தான் பதவி விலக தயார் என்று கூறியுள்ளார். மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ராகுல்காந்தி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு உரிய சான்றுகளை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அவரது எம்.பி அந்தஸ்தை இழக்க நேரிடும். பிரதமர் மோடி பிரதமரான பிறகு அதானியின் விமானத்தை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை” என்று கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments