Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல தடை: பக்தர்கள் சோகம்!

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (18:01 IST)
சபரிமலை மாலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை என்ற அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. 
 
கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வரும் நிலையில் பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் சன்னிதானத்தில் உள்ள அனைத்து பக்தர்களும் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் அறிவித்துள்ளது
 
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் பத்தினம்திட்டா உள்பட 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சபரிமலை கோவிலில் பக்தர்கள் அனுமதி இல்லை என தேவஸ்தானம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

ரூ.55,000ஐ தாண்டியது தங்கம் விலை.. ஒரு லட்சத்தை தாண்டியது வெள்ளி விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! – மிஸ் பண்ணிடாதீங்க!

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments