Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று!

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று!
, ஞாயிறு, 23 ஜனவரி 2022 (18:40 IST)
இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அவருடைய டுவிட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகத்தில் உள்ள ஒருசில எம்எல்ஏக்கள் மற்றும் இந்தியாவில் உள்ள ஒருசில முதல் அமைச்சர்கள் உள்பட பல அரசியல் பிரபலங்களுக்கும் கொரோனா பாதிக்கப்பட்டு வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவரை ஐதராபாத்தில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
மேலும் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜப்பான் பிரதமருக்கு நேதாஜி விருது! – இந்திய அரசு கௌரவம்!