Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம் பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்த கும்பல்

Webdunia
வெள்ளி, 19 செப்டம்பர் 2014 (08:51 IST)
டெல்லியில் காரில் சென்ற பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

டெல்லியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணியாற்றிவரும் பெண் காவலர் ஒருவரின் மகள் நண்பர்கள் 3 பேருடன் காரில் சென்றுள்ளார்.

அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்தைக் கலந்து அந்தப் பெண்ணுக்கு அவர்கள் கொடுத்துள்ளனர். இதனை குடித்ததால் அந்தப் பெண்  மயங்கிவிழுந்துள்ளார். பின்னர் அந்தப் பெண்ணை 3 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர் டெல்லியில் உள்ள  நேரு மேம்பாலம் அருகே தூக்கிப் போட்டு விட்டுச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், அவ்வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மயக்க நிலையில் இருந்த அந்த பெண்ணை பார்த்ததும், காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.

அதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.

இது குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!