Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்க் போடாமல் வந்ததுடன் போலீஸை கேவலமாக பேசிய தம்பதி! – அபராதம் விதித்து நடவடிக்கை!

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (12:02 IST)
டெல்லியில் ஊரடங்கு விதிகளை மீறியதுன் காவலர்களிடம் கேவலமாக பேசிய தம்பதியினருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மாநில அளவில் தலைநகர் டெல்லியில் தினசரி பாதிப்புகள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில் டெல்லியில் வார இறுதி மற்றும் இரவு நேர ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளதுடன் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் உள்ளிட்டவை கடுமையாக பின்பற்றப்படுகின்றன.

இந்நிலையில் டெல்லியில் பங்கஜ் தத்தா மற்றும் அவரது மனைவி அபா ஆகியோர் மாஸ்க் அணியாமல் காரில் சென்றுள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார் மாஸ்க் அணிய சொல்லி வலியுறுத்தியதுடன், மாஸ்க் அணியாமல் வந்ததற்கு அபராதம் விதித்துள்ளனர். இதற்கு ஆத்திரமைடைந்த அபா காவலர்களை கொச்சையான வார்த்தைகளில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் காவலர்களிடம் அவதூறாக நடந்து கொண்டதற்காக தம்பதிகளுக்கு மேலும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments