Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியை கண்டித்து போஸ்டர்! – டெல்லியில் ஆசாமிகள் கைது!

Webdunia
ஞாயிறு, 16 மே 2021 (12:36 IST)
டெல்லியில் பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய நபர்கள் கைடு செய்யப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாடெங்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் டெல்லியின் பல பகுதிகளில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

அதில் நாட்டில் மக்களுக்கு தடுப்பூசி தேவை உள்ள நிலையில் வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி தடுப்பூசியை அனுப்புவதாக குற்றம் சாட்டியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து பலர் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் இதுவரை 17 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தொழில்முறை போஸ்டர் ஒட்டுபவர்கள் என கூறப்படும் நிலையில் போஸ்டரை அச்சடித்தது யார் என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கேரள மாநிலத்தில் தொடரும் கனமழை.. 7 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

முல்லைப் பெரியாறு என்பது நதியல்ல; தமிழ்நாட்டின் ரத்த ஓட்டம்: வைரமுத்துவின் ஆவேச பதிவு..!

6 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

அடுத்த கட்டுரையில்
Show comments