Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரதமர் அலுவலகத்தில் தீ விபத்து

பிரதமர் அலுவலகத்தில் தீ விபத்து
, செவ்வாய், 29 ஏப்ரல் 2014 (14:36 IST)
டெல்லியில் பிரதமர் அலுவலகம் அருகே ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.  

டெல்லியில் சவுத் பிளாக் பகுதியில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று காலை சுமார் 6.25 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. பிரதமர் அலுவலக கட்டிடத்தின் தரை தளத்தில் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து உடனடியாக தீ அணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 
 
சம்பவ இடத்திற்கு விரைந்த 7 தீயணைப்பு வண்டிகள் சில நிமிடங்களில் தீயை அணைத்தன.
 
இந்த தீ விபத்தால் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், கணினி  யு.பி.எஸ். கருவியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும் டெல்லி தீ அணைப்பு துறையினரின் இயக்குனர் ஏ.கே. ஷர்மா தெரிவித்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil