பாஜக நிர்வாகி பிரசாந்த் உமாராவை 20ம் தேதி வரை கைது செய்ய தடை! நீதிமன்றம் உத்தரவு..!

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2023 (12:34 IST)
பாஜக நிர்வாகி பிரசாந்த் உமாராவ் என்பவரை மார்ச் 20 ஆம் தேதி வரை கைது செய்ய தடை என டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரப்பிய உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி பிரசாந்த் உமாராவ் மீது தமிழக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
 
இந்த நிலையில் முன் ஜாமின் கேட்டு பிரசாந்த் உமாராவ் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் தூத்துக்குடி நீதிமன்றத்தை நாட டெல்லியின் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
மேலும் பிரசாந்த் உமாராவை வரும் 20ம் தேதி வரை கைது செய்ய தடை என்றும் டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து பிரசாந்த் உமாராவ் தூத்துக்குடி நீதிமன்றத்தில் முன்ஜாமின் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மிளகாய் பொடி தூவி நகைக்கடையில் கொள்ளையடிக்க முயற்சித்த பெண்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!

சகோதரர் மருத்துவமனையில் அனுமதி!.. பெங்களூர் பறக்கும் ரஜினிகாந்த்!...

பிறந்தநாளன்று தன்னை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொண்ட காவலர்!.. வேலூரில் சோகம்...

பிகார் பெண் எம்.பி. இரண்டு முறை வாக்களித்தாரா? இரு கைகளிலும் மை இருந்ததால் சர்ச்சை..!

8க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து குதறியதால் 6 ஆடுகள் பலி.. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments