Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொங்கு சட்டசபை ஏற்பட்டால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு..!

Mahendran
புதன், 5 பிப்ரவரி 2025 (19:04 IST)
டெல்லியில் இன்று தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில், இந்த தேர்தலில் தொங்கு  சட்டசபை ஏற்பட்டால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு இல்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
70 தொகுதிகளை கொண்ட டெல்லி மாநில சட்டமன்றத்திற்கு இன்று வாக்குப்பதிவு நடந்த நிலையில், இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது. 
 
இன்று பதிவான வாக்குகள், வரும் எட்டாம் தேதி எண்ணிக்கை நடைபெறும் நிலையில், அன்றைய தினம் மதியத்திற்குள் ஆட்சியை பிடிப்பது யார் என்று தெரிவித்துவிடும். 
 
ஒருவேளை தொங்கு சட்டசபை ஏற்பட்டால், ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்குமா அல்லது காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. 
 
இதற்கு பதில் கூறிய காங்கிரஸ் கட்சியின் பவன் ஜெயராம், கடந்த இரண்டு தேர்தல்களை போலவே டெல்லி மக்கள் தீர்க்கமான முடிவை கொடுப்பார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. டெல்லி மக்களுக்கு எந்த குழப்பமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அப்படி ஒருவேளை தொங்கு சட்டசபை ஏற்பட்டால், இன்னொரு தேர்தல் நடக்கும். ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு இல்லை என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments