Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 26 மார்ச் 2020 (09:20 IST)
கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு கொரோனா
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஏழை பணக்காரர், சாமானியர் விவிஐபி என எந்தவித பேதமும் இன்றி அனைவரையும் தாக்கி வருகிறது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், ஸ்பெயின் துணை பிரதமர் கர்மேன் கால்வோ உட்பட பல விவிஐபிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களுக்கு தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான மருத்துவர்கள் உலகம் முழுவதும் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். அவர்களது சேவை மிகவும் மதிக்கத்தக்க ஒன்றாக கருதப்படுகிறது
 
இந்த நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு கடந்த சில நாட்களாக சிகிச்சை அளித்து வந்த டெல்லி மருத்துவர் ஒருவருக்கும் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இதனை அடுத்து மார்ச் 12 முதல் 16 வரை அவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகளும் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாகவும் டெல்லி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் டெல்லி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments