Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அருண் ஜெட்லி, ஆம் ஆத்மி மோதல் இடையில் விராட் கோலி

அருண் ஜெட்லி, ஆம் ஆத்மி மோதல் இடையில் விராட் கோலி
, வியாழன், 31 டிசம்பர் 2015 (19:09 IST)
அருண் ஜெட்லிக்கு எதிராக ஆம் ஆத்மி டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரத்தை கையிலெடுத்துள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையில் தற்போது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மாட்டிக்கொண்டு முழிக்கிறார்.


 
 
சமீபத்தில் ஒரு ஆங்கில இதழுக்கு பேட்டியளித்த விராட் கோலி தன்னை 14 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் சேர்க்க லஞ்சம் கேட்க்கப்பட்டதாகவும் அதற்கு தனது தந்தை மறுத்து விட்டதாக தெரிவித்தார். தனது திறமையான ஆட்டத்தால் அடுத்த ஆண்டே டெல்லி அணியில் இடம் பிடித்ததாக அந்த நாளிதழில் விராட் கோலி கூறினார்.
 
இந்த விவகாரத்தை தற்போது ஆம் ஆத்மி கையிலெடுத்துள்ளது. விராட் கோலியின் பேட்டியை ஆதாரமாக கோண்டு அவரை அணியில் சேர்க்க லஞ்சம் கேட்டது யார்? என கேள்வியெழுப்பியுள்ளது ஆம் ஆத்மி கட்சி. அப்போதைய டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தவர் அருண் ஜெட்லி என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil