Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண் கருவை கலைக்க மாட்டோம் - தம்பதியின் உறுதிமொழி

பெண்  கருவை கலைக்க மாட்டோம் - தம்பதியின் உறுதிமொழி
, திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (16:50 IST)
டெல்லியில் புதுமணத் தம்பதியினர், 'பெண்  கருவை கலைக்க மாட்டோம்' என உறுதி மொழி எடுத்துள்ளனர்.

டெல்லி மாநில வருவாய்த்துறை, பெண் சிசு  கொலையை ஒழிக்கவும், அது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், புது மணத் தம்பதிகளைத் 'பெண் கருவை கலைக்க மாட்டோம், பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளைப் போல பாதுகாத்து வளர்ப்போம். சட்ட விரோதமாக கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை அறிய முயற்சிக்க மாட்டோம்' என உறுதிமொழி எடுக்க ஊக்குவித்ததாக தெரிவித்துள்ளது.

இதன்படி, இதுவரை 4 புதுமணத் தம்பதிகள் இந்த உறுதி மொழியை எடுத்துள்ளதாகவும், இதற்கான அறிவிப்பை டெல்லி மாநில அரசின் வருவாய்த்துறை ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

Share this Story:

Follow Webdunia tamil