Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாடும் டெல்லி முதல்வர்

Webdunia
புதன், 11 ஜூலை 2018 (10:10 IST)
டெல்லியில் துணை நிலை ஆளுனருக்கும், முதல்வருக்குமான அதிகார பிரச்சனையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் துணை நிலை ஆளுனர் தொடர்ந்து அரசு நடவடிக்கைகளை முடக்கும் விதமாக நடந்து கொள்வதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் மாநிலத்தில் யாருக்கு பவர் அதிகம் என்று தீர்ப்பளிக்க அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார்.
 
இதுகுறித்து விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மாநில அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது என தீர்ப்பளித்தது.
 
இந்நிலையில் கெஜ்ரிவால், சில முக்கிய அதிகாரிகளை இடமாற்றம் செய்ய சொல்லி தலைமை செயலகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளார். செயலாளர்களை இடமாற்றம் செய்யும் அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கு மட்டுமே உள்ளது என்று அவருக்கு பதில் அனுப்பப்பட்டுள்ளது.
 
இதனால் மீண்டும் கடுப்பான கெஜ்ரிவால், இது சம்மந்தமாக விளக்கம் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். அவரின் மனு மீதான விசாரணை வரும் வாரத்தில் வர உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் யாராவது ’யார் அந்த சார்’ என சொன்னால் அது நீதிமன்ற அவமதிப்பு: அரசு வழக்கறிஞர்..!

ஒரு பக்கம் பிச்சை எடுக்கும் பாகிஸ்தான், இன்னொரு பக்கம் தீவிரவாதம் செய்கிறது: இந்திய எம்பிக்கள் குழு

ஞானசேகரனுக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை? நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

பங்குச்சந்தை திடீர் சரிவு.. வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments