மழை பெய்ததால் குறைந்தது காற்றின் மாசு.. டெல்லியில் வாகன கட்டுப்பாடு இல்லை..!

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2023 (18:36 IST)
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் மாசு அதிகரித்ததன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக  ஒற்றை பதிவெண் கொண்ட வாகனங்கள் மற்றும் இரட்டை பதிவு கொண்ட வாகனங்கள் இயக்கம் கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டது. 
 
இந்த நிலையில் டெல்லியில் திடீரென மழை பெய்ததால் காற்றின் மாசு குறைந்துள்ளது. மழை காரணமாக காற்றின் தர குறியீடு மேம்பட்டு உள்ளதால் நவம்பர் 13 முதல் 20 வரை அமல்படுத்தப்பட்ட ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை பதிவெண் முறையிலான வாகன கட்டுப்பாடு விதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். 
 
இதனால் டெல்லி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  ஏற்கனவே டெல்லியில் செயற்கை மழை பெய்ய ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் தற்போது இயற்கையாகவே மழை பெய்து காற்றின் மாசுவை குறைத்து உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் செல்ல அனுமதி கேட்ட விஜய்.. டிஜிபி அலுவலகம் அனுப்பிய பதில் கடிதம்..!

10 மாவட்டங்களில் இன்று கொட்டப்போகுது கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

விஜய் வீட்டுக்கு நள்ளிரவு 1.50 மணிக்கு திடீரென சென்ற போலீசார். அரை மணி நேரம் என்ன நடந்தது?

இருமல் மருந்தால் 21 குழந்தைகள் பலி: 'கோல்ட்ரிஃப்' உரிமையாளரை தமிழகம் வந்து கைது செய்த மத்திய பிரதேச காவல்துறை..!

ஈபிஎஸ் முன் தவெக கொடியை உயர்த்தி காட்டிய தொண்டர்கள்.. கூட்டணி உறுதியாகிவிட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments