Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரங்குகள் தொல்லையால் பிரதமருக்கு கடிதம் எழுதிய எய்ம்ஸ் மருத்துவர்கள்

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2017 (18:16 IST)
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குரங்குகள் தொல்லை அதிகரிப்பதால் நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.


 

 
டெல்லியில் உள்ள எம்ய்ஸ் மருத்துவமனையில் குரங்குகள் மற்றும் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் நோயாளிகள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
 
மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
 
மருத்துவமனையில் உலாவும் குரங்குகளால் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். குரங்குகள் பார்வையாளர்கள் கொண்டு வரும் உணவுகளை பறித்துவிடுகின்றன. நோயாளிகளை குரங்குகள் கடித்துவிட்டு ஓடிவிடுகின்றன. இதனால் நோயாளிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். தெரு நாய்களின் தொல்லைகளும் அதிக அளவில் உள்ளன. 
 
குரங்குகள் மற்றும் நாய்களின் தொல்லையால் பார்வையாளர்கள் நோயாளிகளை பார்க்க மருத்துவமனைக்கு வர அச்சப்படுகின்றனர். இதனை தடுக்க பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இவ்வாறு அந்த கடிதத்தில் மருத்துவர்கள் பிரதமர் மோடியை நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தியுள்ளனர். 

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments