மோடி சர்கார்! கடன் சர்கார்! ... அதிர்ச்சி தரும் புள்ளி விவரங்கள்

Webdunia
ஞாயிறு, 20 ஜனவரி 2019 (11:05 IST)
பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த நான்கரை ஆண்டுகளாக ஆட்சியில் நாட்டின் ஒட்டுமொத்த கடன் தொகை 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்தியாவின் 14வது பிரதமராக கடந்த 2014ம் ஆண்டு நரேந்திர மோடி பதவியேற்றார். இவர் பதவியேற்ற சில மாதங்களில் பொருளாதார சீர்திருத்தம், கருப்பு பண ஒழிப்பு உள்ளிட்ட காரணங்களை கூறி  பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரி போன்ற திட்டங்களை செயல்படுத்தினார். 
 
இந்நிலையில் மோடி தலைமையிலான நான்கரை ஆண்டுகால ஆட்சியில் 50 சதவீதம் அளவில் கடன் தொகை உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் இந்தியாவின் கடன் மதிப்பு 54 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்ததாக நிதி அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
   
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வரையில் மத்திய அரசுக்கு உள்ள கடன் தொகை 82 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது. அதாவது 49 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல பொதுக்கடனை பொறுத்தவரை 48 லட்சம் கோடியிலிருந்து 73 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

பிரதமர் மோடி பொதுக்கூட்ட இடத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி.. ஆந்திராவில் சோகம்..!

4 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, ரூ.1 கோடிக்கும் மேல் ரொக்கம்.. ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் சோதனை.!

திமுக-வின் ஃபெயிலியர் ஆட்சிக்கு முடிவுரை.. தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சி: ஈபிஎஸ்

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: சதுரகிரி மலை ஏறுவதற்கு தடை.. பக்தர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments