Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 ஆண்டுகளில் இல்லாத பேய் மழை: சிக்கித் தவிக்கும் கேரளா - 26 பேர் பலி

Webdunia
வெள்ளி, 10 ஆகஸ்ட் 2018 (12:44 IST)
கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்து வருவதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரமெங்கும் வெள்ள நீர் புகுந்துள்ளது. பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்தும், பல வீடுகள் வெள்ளத்திலும் அடித்து செல்லப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, இடுக்கி மாவட்டங்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளதால் உபரி நீர் முழுவதும் திறந்துவிடப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் பெங்களூரிலிருந்து கேரளாவிற்கு விரைந்துள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் சார்பில் 5 கோடியும், கர்நாடக அரசு சார்பில் 10 கோடி ரூபாயும் கேரளாவிற்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. வீடுகளை இழந்து தவிப்போர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments