Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் மத்திய அமைச்சர் வீட்டில் மர்மமான ஆண் பிணம்

Webdunia
திங்கள், 11 ஆகஸ்ட் 2014 (20:46 IST)
காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான குமாரி செல்ஜா வீட்டில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
42 வயதான சஞ்ஜய் என்ற அந்த நபர் செல்ஜாவின் வீட்டில் வேலை செய்பவரின் கணவர் என்று கூறப்படுகிறது. காவல்துறையினருக்கு வந்த தொலைபேசி தகவலையடுத்து உள்ளூர் காவல் துறை அதிகாரிகளும், குற்றப்பிரிவு மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் குழுவும் செல்ஜாவின் வீட்டுக்கு விரைந்து சென்றது. செல்ஜாவின் வீட்டிலுள்ள வேலைக்காரர்கள் குடியிருப்பில் சஞ்ஜய்யின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர்.
 
சஞ்ஜய்யின் மரணம் இயற்கைக்கு மாறானதாக இருப்பதால், அவரது மரணம் குறித்து விசாரித்து வருவதாக கூடுதல் காவல் ஆணையர் தியாகி கூறியுள்ளார்.

தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! அதிமுகவை விளாசிய ஆர்.எஸ் பாரதி.!!

தொட்டிலில் தூங்கிய 24 நாள் குழந்தை.. குரங்கு கடித்து குதறியதால் பெற்றோர் அதிர்ச்சி..!

19 வயது பெண்ணை காதலித்த இரு இளைஞர்கள்.. கொலையில் முடிந்த முக்கோண காதல்..!

மேற்கு வங்க ரயில் விபத்து..! பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு..! மீட்பு பணி தீவிரம்..!!

பிரதமர் மோடியின் தமிழகம் பயணம் திடீர் ரத்து! என்ன காரணம் தெரியுமா?

Show comments