Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

3 மாதத்துக்கு முன்பே இறந்ததாக நாடகமாடி வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்தவர் கைது

3 மாதத்துக்கு முன்பே இறந்ததாக நாடகமாடி வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்தவர் கைது
, புதன், 27 ஆகஸ்ட் 2014 (13:09 IST)
இறந்துவிட்டது போல் நாடகமாடி 3 மாதமாக வேறு பெண்ணுடன் ரகசியமாக வாழ்ந்து வந்த ஆம் ஆத்மி தொண்டர் பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.
 
டெல்லி புறநகரான நொய்டா பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன் சர்மா. தகவல் அறியும் ஆர்வலமான இவர் ஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினராக உள்ளார். 38 வயதான இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காரில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
 
இந்த நிலையில் கொல்லப்பட்டதாக கருதப்பட்ட மோகன் சர்மா உயிருடன் இருப்பது அன்மையில் தெரிய வந்தது. அவர்தான் இறந்ததாக நாடகமாடி வேறு ஒரு பெண்ணுடன் வசித்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
 
மோகன் சர்மாவின் மனைவி சவீதா தனது கணவர் உயிருடன் இருப்பதாகவும், பொய்யான தகவல்கள் மூலம் இறந்துவிட்டதாக நாடகமாடி மறைந்து வாழ்வதாகவும் போலீசில் புகார் செய்தார்.
 
செல்போன் நம்பர் மூலம் போலீசார் அவரை தேடினர். பெங்களூரில் அவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீஸ் படைகள் தனித்தனியாக அனுப்பப்பட்டன.
 
மோகன் சர்மா பெங்களூரில் வேறு ஒரு பெண்ணுடன் வசித்து வருவதை போலீசார் கண்டு பிடித்தார். இறந்ததாக நாடகமாடி அனைவரையும் ஏமாற்றிய அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காரில் இறந்து கிடந்தவர் யார் என்று புதிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil