Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒடிசாவை உலுக்கிய டானா புயல்: உடனடியாக உதவுவதாக சொன்ன பிரதமர் மோடி!

Prasanth Karthick
வெள்ளி, 25 அக்டோபர் 2024 (09:28 IST)

வங்க கடலில் உருவான டானா புயல் ஒடிசாவில் கரையை கடந்த நிலையில் பாதிப்புகளில் தேவையான உதவிகளை செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

 

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ‘டானா’ புயலாக உருவான நிலையில் நேற்று ஒடிசாவின் கடற்கரை பகுதியில் கரையை கடந்தது. இதனால் மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.

 

இதனால் ஒடிசாவின் கடலோர பகுதிகளில் வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ள தகவலின்படி, 6,008 பேர் முகாம்களில் தங்கியுள்ளனர். பாலசோர் மாவட்டத்தில் 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
 

ALSO READ: நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படம் டிசம்பர் 5-ஆம் தேதி வெளியாகிறது!
 

அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளில் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

புயல் குறித்து ஒடிசா முதல்வரிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவை பகைத்த பிரதமர்.. ராஜினாமா செய்ய கெடு விதித்த எம்.பிக்கள்!

காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: பள்ளிகள் விடுமுறை..!

தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்.. மதுரையில் பரபரப்பு..!

பயணியுடன் தகராறு.. ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த நடத்துனர்..!

கரையை கடந்தது டானா புயல்.. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து பாதிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments