Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் ஒரு கோடீஸ்வரர்.. கேரளா லாட்டரி நிறுவனம் அதிரடி முடிவு..!

Siva
வெள்ளி, 15 மார்ச் 2024 (08:57 IST)
தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டாலும் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி சீட்டுகள் அமோகமாக விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பாக ஓணம் போன்ற திரு நாட்களின் போது பம்பர் பரிசு லாட்டரி டிக்கெட் ஏராளமாக விற்பனையாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் 50 லட்சம் முதல் 75 லட்சம் வரை முதல் பரிசு கொண்ட லாட்டரி டிக்கெட்டுகள் தினந்தோறும் விற்பனை ஆகி வரும் நிலையில் இருந்து தற்போது பரிசு தொகையை ரூபாய் ஒரு கோடியாக உயர்த்த கேரளா லாட்டரி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்து டிக்கெட்டுகளின் பரிசு தொகையை ஒரு கோடிக்கு உயர்த்தி அதிகமாக லாட்டரி சீட்டுகளை பிரிண்ட் செய்து விற்பனை செய்ய பரிந்துரை செய்யப்பட்டதாகவும் இந்த பரிந்துரையை கேரளா அரசு ஏற்றுக்கொண்டால் தினமும் ஒரு கோடீஸ்வரர் கேரளாவில் உருவாகிவிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் ஒரே ஒரு கோடீஸ்வரரை உருவாக்க கோடிக்கணக்கான பேர்களை நஷ்டம் அடைய செய்து வருகிறது என்றும் தமிழ்நாட்டை போலவே கேரளாவிலும் லாட்டரி சீட்டை தடை செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல்! 224 பேர் பலி! - தொடரும் பதற்றம்!

27 வருடம் முன்பும் விமான விபத்தில் காப்பாற்றிய சீட் நம்பர் 11A!? விமானத்தில் அந்த சீட்டுக்கு ஏக கிராக்கி!

நேற்று நடந்த TNPSC தேர்வை 63,000 பேர் எழுதவில்லை.. என்ன காரணம்?

ஈரான் போர்! இந்தியாவில் எகிறப்போகும் பெட்ரோல் விலை? - மத்திய அரசு முன்னெச்சரிக்கை!

சோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: டாக்டர்கள் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments