Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகித அகவிலைப்படி உயர்வா?

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2023 (14:16 IST)
மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட இருப்பதாகவும் இது குறித்து அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. 
 
கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% என இருந்த அகவிலைப்படி  38 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் 38 சதவீதத்திலிருந்து 4 சதவீதம் உயர்த்தப்பட்டு 42 சதவீதமாக அகவிலைப்படி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் மற்றும் கூறப்படுகிறது. 
 
2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 42 சதவீத அகவிலைப்படி கணக்கெட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலன் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
 
ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு வாக்குறுதி அளித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments