Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. புயலாக வலுப்பெற வாய்ப்பு..!

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2023 (11:17 IST)
தென் கிழக்கு அரபிக்கடலில் திடீரென குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றியிருப்பதாகவும் இதனை அடுத்து அது புயலாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கோடை காலம் முடிவடைந்து தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறக்கூடும் என்று கூறப்படுகிறது. எனவே கேரளாவில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்திலும் ஒருசில இடங்களில் மழை பெய்யும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments