Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் வாரணாசி தொகுதியில் பயங்கர கலவரம்:ஊரடங்கு உத்தரவு

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2015 (08:25 IST)
உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் சாதுக்கள் சென்ற பேரணியில் பயங்கர கலவரம் வெடித்ததை தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


 
 
விநாயகர் சிலைகளை கங்கையில் கரைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 21 மற்றும் 23ம் தேதிகளில் சாமியார்கள் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறையினர் தடியடி நடத்தினர். அந்த சம்பவத்தைக் கண்டித்து வாரணாசியில் நேற்று பேரணி நடைபெற்றது.
 
இதில் உள்ளூர் மக்கள், சாதுக்கள் என ஏராளமானோர் திரளாகக் கலந்து கொண்டனர்.  அமைதியாக சென்ற பேரண திடீரென கலவரமாக வெடித்தது. பேரணியில் சென்றவர்கள் அங்கிருந்த கடைகள் மற்றும் காவல்துறை வாகனங்களுக்கு தீவைத்தனர்.
 
இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. கலவரத்தை அடுத்து அங்கு ஊடரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சிக்கு 3 இலக்க வெற்றி கிடைக்காது: பிரசாந்த் கிஷோர் உறுதி..!

கரையை கடந்தது புயல்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்..!

50 டிகிரி செல்சியஸ் வெப்பம்.. வெப்ப அலை எதிரொலி: 144 தடை உத்தரவால் அமல்..!

கரையை கடக்க தொடங்கியது ரெமல்’ புயல்.. கொல்கத்தாவில் கனமாழி

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

Show comments