Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு; என்டிஏ அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (17:40 IST)
சிஎஸ்ஐஆர் என்று கூறப்படும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் சார்பில் நடத்தப்படும் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணி மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவி தொகை பெற நெட் தேர்வு எழுதப்படுவது வழக்கமானது. 
 
இந்த நிலையில்  இந்த தேர்வு ஜூன் மாதம் 6, 7, 8 ஆகியது மூன்று நாட்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆன்லைன் முறையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வு குறித்து விவரங்களுக்கு https://ugcnet.nta.nic.in/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று பார்க்கலாம்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments