Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியங்கா காந்தியின் இமேஜை உயர்த்திய இடைத்தேர்தல் முடிவு.. 8 மாத உழைப்புக்கு கிடைத்த வெற்றி..!

Siva
திங்கள், 23 ஜூன் 2025 (15:30 IST)
கேரளாவின் நிலாம்பூர் தொகுதி  இடைத்தேர்தல் முடிவு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு  மிகவும் முக்கியமானது. ஏனெனில் நிலம்பூர் தொகுதிக்கான பிரச்சாரத்தை முன்னின்று நடத்திய பிரியங்காவுக்கு, கேரள தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், கட்சித் தொண்டர்களிடையே அவரது தலைமை மேலும் வலுப்பெறும்.  
 
நிலம்பூர், பிரியங்காவின் வயநாடு நாடாளுமன்ற தொகுதியின் கீழ் வருகிறது. ஆகையால், தேர்தலுக்கு 8 மாதங்களுக்கு முன்பே பிரச்சாரத்தை தொடங்கி, வாக்காளர்களிடையே சாதகமான சூழலை உருவாக்க பிரியங்கா காந்தி முயற்சித்தார். 
 
பினராயி விஜயன் அரசு தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முடிவை நெருங்கி வரும் நிலையில், வனப்பகுதிக்கு அருகிலுள்ள இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல், ஆளும் சி.பி.ஐ.(எம்.) தலைமையிலான எல்.டி.எஃப். மற்றும் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப். ஆகிய இரு தரப்பினருக்கும் ஒரு கௌரவ போராக மாறியுள்ளது.
 
இந்த தொகுதியில் காங்கிரஸ் தோல்வி அடைந்தால் பிரியங்கா காந்தியின் தலைமைக்கு எதிராக விமர்சனங்கள் எழும் என்பதால் தான், தனது வேட்பாளரின் வெற்றியை உறுதிப்படுத்த பிரியங்கா தீவிரமாக பிரச்சாரம் செய்தார். அவர் எதிர்பார்த்தபடியே நிலாம்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 1,717 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் நீடிப்பு இல்லையா? மாணவர்கள் அதிர்ச்சி..!

வங்கிகளின் மினிமம் பேலன்ஸ் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை: ரிசர்வ் வங்கி

அரசு பள்ளிகளை மூடிய உங்களுக்கு விரைவில் மூடுவிழா! ரெடியா இருங்க! - அன்புமணி ராமதாஸ்!

இந்தியாவிடம் பாய்ச்சல்.. சீனாவிடம் பதுங்கல்! வரிவிதிப்பை சீனாவுக்கு மட்டும் 90 நாட்கள் நீட்டித்த அமெரிக்கா!

இந்தியாவுக்கு வரி போட்டதால் ரஷ்யாவுக்கு பாதிப்பு.. டொனால்ட் டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments