Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாக்கிய முதலையை சமையல் பாத்திரத்தால் அடித்து விரட்டிய துணிச்சல் பெண்

தாக்கிய முதலையை சமையல் பாத்திரத்தால் அடித்து விரட்டிய துணிச்சல் பெண்
, சனி, 1 ஆகஸ்ட் 2015 (17:47 IST)
ஒடிசாவில் கடிக்க வந்த முதலையை ஒரு பெண் சமையல் பாத்திரத்தால் அடித்து விரட்டியடித்துள்ளார்.
 
ஒடிசா மாநிலம் கேந்திரபரா மாவட்டத்தி்ல் உள்ள சிங்கிரி கிராமத்தைச் சேர்ந்த சப்திரி சமால் என்பவர் நேற்று வீட்டின் அருகே உள்ள சிற்றோடையில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தார். அப்போது சிற்றோடையிலிருந்து முதலை ஒன்று சப்திரி சமாலை திடீரென தாக்கியது. பின் அவரை தண்ணீருக்குள் இழுத்து சென்றது.
 
இந்த நிலையில் சமால் தன் கையில் வைத்திருந்த பாத்திரத்தை முதலையின் நெற்றி மற்றும் கண்களில் தாக்கினார். இந்த திடீர் தாக்குதலில் நிலை குலைந்த முதலை அவரை விட்டுச் சென்றது. இச்சம்பவம் குறித்து அவர் கூறுகையில், தண்ணீருக்குளிருந்து பாய்ந்து வந்த முதலை என்னை தண்ணீருக்குள் அடியில் இழுத்துச் சென்றது. அப்போது என் கையில் இருந்த பாத்திரத்தால், அதனை தாக்கினேன். இதையடுத்து அந்த முதலை என்னை விட்டுச் சென்றது என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil