Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலைக்கார சிறுமியை துன்புறுத்தியதாக கிரிக்கெட் ஆட்டக்காரரின் மனைவி கைது

Webdunia
ஞாயிறு, 4 அக்டோபர் 2015 (18:24 IST)
தங்கள் வீட்டில் பணிபுரிந்த சிறுமியை அடித்து சித்தரவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த வங்கதேசத்தின் பிரபல கிரிக்கெட் ஆட்டக்காரர் ஷஹாதத் ஹுசைனின் மனைவியைக் கைது செய்திருப்பதாக வங்கதேசக் காவல்துறை அறிவித்திருக்கிறது.


 
 
கடந்த மாதத்தில் இவர்கள் வீட்டில் வீட்டு வேலைபார்த்த 11 வயது சிறுமி பலத்த காயங்களுடன் தெருவில் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, கிரிக்கெட் ஆட்டக்காரர் ஷஹாதத் ஹுசைனும் அவரது மனைவியும் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானார்கள்.
 
இந்த சிறுமி அவர்கள் வீட்டில் ஒரு ஆண்டு பணிபுரிந்திருக்கிறார்.
 
இன்னமும் கிரிக்கெட் ஆட்டக்காரர் பிடிபடவில்லை. ஆனால் அவரை தாம் கண்டிப்பாக பிடித்துவிடுவோம் என்று வங்கதேச காவல்துறை அறிவித்துள்ளது.


 

 
ஆனால் அவரது மனைவி ஜாஸ்மின் ஜஹான் வங்கதேசத்தலைநகர் டாகாவில் இருக்கும் அவரது பெற்றோர் வீட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments