Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் திறந்து வைத்த விமான நிலையத்தில் விரிசல்? உடைந்து தொங்கிய மேற்கூரை!

Webdunia
திங்கள், 24 ஜூலை 2023 (09:26 IST)
சமீபத்தில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட விமான நிலையத்தின் மேற்கூரை உடைந்து தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்தியாவின் ஒரு பகுதியான அந்தமான் தீவுகள் வங்க கடலில் பல மைல் தொலைவில் அமைந்துள்ளன. அந்தமானுக்கு கப்பல், விமானம் இரண்டு வழிகளில் பயணம் செய்ய முடியும். இதற்காக அந்தமானின் போர்ட்ப்ளெயரில் வீர் சாவர்க்கர் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது.

சமீபத்தில் இந்த விமான நிலையம் புதுப்பிக்கப்பட்டு பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. புதிய விமான நிலைய கட்டிடம் திறந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில் விமான நிலையத்தின் ஒரு பகுதியில் மேற்கூரை உடைந்து தொங்கிக் கொண்டிருந்துள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதை எதிர்கட்சியினர் சிலர் விமர்சித்து வரும் நிலையில் விமான நிலையத்தில் தொங்கிய மேற்கூரையை பழுது பார்க்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!

கல்லூரி தேர்வில் ஆர்.எஸ்.எஸ் குறித்து சர்ச்சை கேள்வி.. வினாத்தாள் தயாரித்த பேராசிரியருக்கு வாழ்நாள் தடை..!

கோழியை காப்பாற்றி முதலையை ஏப்பம் விட்ட ஆனந்த் அம்பானி? - கலாய்க்கும் நெட்டிசன்கள்!

ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தை விற்பனை! 11 பேரை டிக்கெட்டும் கையுமாக கைது செய்த போலீஸ்!

Rain alert: கோடையை குளிர்விக்கும் மழை.. இன்று 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments