Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாயிலே வெடித்த பட்டாசு: பரிதாபமாய் உயிரிழந்த 7 வயது சிறுவன்

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2018 (11:29 IST)
மகாராஷ்டிராவில் சிறுவனின் வாயிலே பட்டாசு வெடித்ததில் அவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தீபாவளி தொடங்கவிருப்பதால் குழந்தைகள் குஷியில் ஆழ்ந்துள்ளனர். சில வாண்டுகள் இப்பொழுதே தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.
 
அப்படி மகாராஷ்டிரா மாநில புல்தானா மாவட்டத்தில் 7 வயது சிறுவன் ஒருவன் ஜாலியாக பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தான். அவன் பற்றவைத்த பட்டாசு வெடிக்காததால், சிறுவன் அந்த பட்டாசை எடுத்து அதன் திரியை வாயால் கடித்துள்ளான்.
 
அப்போது பயங்கர சத்தத்துடன் அந்த பட்டாசு வெடித்ததில் சிறுவன் படுகாயமடைந்தான். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments