Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக பிரச்சினைகள் தீர பசுக்கள் தான் தீர்வு!? – நீதிமன்றம் அளித்த வினோத தீர்ப்பு!

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (11:12 IST)
பசுக்கள் கடத்தப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த குஜராத் மாவட்ட நீதிமன்றம் பசுக்கள் குறித்து பேசிய தகவல் வைரலாகியுள்ளது.

வட இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பசுக்கள் இறைச்சிக்காக கடத்தப்படுவது, பசு இறைச்சி விற்பது தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது. அதை மீறியும் சிலர் பசுக்களை இறைச்சிக்காக கடத்துவது தொடர்கதையாக உள்ளது.

அவ்வாறாக பசுக்களை கடத்திய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு சமீபத்தில் குஜராத் மாநிலத்தின் தபி மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதமும் விதித்தது.

இந்த வழக்கில் பசுமாடுகள் குறித்து பேசிய நீதிபதிகள் “உலகில் பசு வதையை நிறுத்தினால் பூமியில் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். பசுவின் சாணத்தால் கட்டப்படும் வீடுகள் அணுக்கதிர் வீச்சையே தாங்க வல்லவை. பல நோய்களுக்கு பசுவின் கோமியம் மருந்தாக உள்ளது” என்று கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கருத்து அறிவியல்பூர்வமற்றது என சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments