Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்க் இல்லனா 500 ரூபாய் ஃபைன்!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (16:45 IST)
ரயில் நிலையங்களில் பின்பற்றப்படும் கொரோனா தொற்று தடுப்பு நெறிமுறைகள் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு. 
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 22,431 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ரயில் நிலையங்களில் பின்பற்றப்படும் கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. 
 
இதில் ரயில் நிலையங்களிலும், ரயில்வே வளாகத்திலும், ரயில்களிலும் முகக்கவசம் அணியாமல் இருந்தால் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments