Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி படத்தை கிழித்த எம்.எல்.ஏவுக்கு அபராதம்: எவ்வளவு தெரியுமா?

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (16:26 IST)
பிரதமர் மோடியின் படத்தைக் கிழித்த எம்எல்ஏ உள்பட ஆறு பேர்களுக்கு வெறும் ரூபாய் 99 அபராதமாக விதித்து தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த எம்எல்ஏ ஆனந்த் பட்டேல் என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தின் போது துணைவேந்தர் அறையில் இருந்த பிரதமர் மோடியின் படத்தை கிழித்தார். 
 
இதுகுறித்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியான நிலையில் துணை வேந்தர் அறையில் இருந்த பிரதமர் மோடியின் படத்தை கிழித்த காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் பட்டேல் உள்பட ஆறு பேர்களுக்கு ரூபாய் 99 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 
 
இந்த அபராத தொகையை ஏழு நாட்களுக்குள் கட்ட வேண்டும் என்றும் அவ்வாறு கட்டவில்லை என்றால் சிறை தண்டனை எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கள்ளக்காதலை கணவர் ஏற்கவில்லை.. மனவிரக்தியில் கள்ளக்காதலனுடன் இளம்பெண் தற்கொலை..!

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் பதினான்கு பேர், தங்கம் மற்றும் வெள்ளி,பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

சிறிய அளவு ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கருட சேவை: தவறி கீழே விழுந்த குடையால் பரபரப்பு..!

நான் மனிதன் அல்ல! பரமாத்மாவால் பூமிக்கு அனுப்பப்பட்டேன்! – பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments