Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி.பி.எஸ்.இ வினாத்தாள் வழக்கு தள்ளுபடி!

Webdunia
புதன், 4 ஏப்ரல் 2018 (12:45 IST)
சி.பி.எஸ்.இ வினாத்தாள் வெளியானது தொடர்பான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த 26-ந்தேதி நடந்த 12-ம் வகுப்பு பொருளாதார தேர்வின் வினாத்தாளும் 28-ந்தேதி 10-ம் வகுப்பு கணிததேர்வின் வினாத்தாளும் சமூக வலைத்தளங்களில் லீக் ஆனதாக கூறப்பட்டது.
 
இதனையடுத்து, சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு பொருளியல் பாடத்திற்கான மறு தேர்வு ஏப்ரல் 25 -ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், 10-ம் வகுப்பு கணித பாடத்திற்கான மறுதேர்வு இல்லை என்று அறிவித்தது.
 
இந்நிலையில், சி.பி.எஸ்.இ வினாத்தாள் வெளியானது குறித்து தொடரப்பட்ட வழக்குகள் இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதிகள் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், மறுதேர்வு தொடர்பாக நீதிமன்றம் தலையிடாது என்றும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அம்மாவின் ஆசையை நிறைவேற்றம்: அஸ்தியை கண்ணாடி பாட்டிலில் வைத்து கடலில் எறிந்த மகள்..!

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments