Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுமார் 9,000... கொரோனா மினிமம் டார்கெட்டே இவ்வளவா?

Webdunia
வியாழன், 2 ஏப்ரல் 2020 (12:17 IST)
இந்தியாவில் எப்படியும் 9,000 பேரை கொரோனா தாக்கும் என சில கணக்கீடுகள் வெளியாகியுள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. ஆனால், இந்தியாவில் தற்போது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் வந்துள்ளது. 
 
டெல்லியில் நடந்த மத வழிபாட்டில் கலந்து கொண்டவர்களால் ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து உள்ளது. 
 
இந்த மாநாட்டில் சுமார் 7600 இந்தியர்கள் மற்றும் 1300 வெளிநாட்டினர் கலந்துகொண்டதாகவும் தற்போது இந்த நிகழ்வு இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மிகப்பெரிய இடமாக உருவெடுத்துள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 
இந்த மாநாட்டில் கலந்துக்கொண்ட அனைவரையும் தேடி வருவதாகவும், இவர்கள் தாமாகவே முன்வந்து கொரோனா சோதனை செய்துக்கொள்வது நல்லது எனவும் கூறப்பட்டு வருகின்றது. அப்படி இவர்கள் முறையாக சோதனை செய்துக்கொள்ளாவிட்டால் 9,000 பேர் வரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments