Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் கொரோனா வைரஸ் பலி அதிகரிப்பு: இந்தியா முன்னெச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 21 ஜனவரி 2020 (13:39 IST)
சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் அது இந்தியாவில் பரவாமல் இருக்க இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சீனாவில் திடீரென பரவியுள்ள கொரோனா வைரஸால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவை தொடர்ந்து தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவி விடாமல் இருக்க இந்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சீனாவிலிருந்து இந்தியா வருபவர்களுக்கு பல்வேறு மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கோரனா வைரஸ் எங்கிருந்து பரவுகிறது என்பதை அறிய சீன மருத்துவ நிபுணர்கள் விலங்குகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வைரஸ் குறித்த மேலதிக விவரங்களை புனே தேசிய வைராலஜி நிறுவனம் ஆராய்ச்சி செய்து வருகிறது.

இது மற்றொரு வகை நிம்மோனியா காய்ச்சல் என்று மருத்துவர்கள் கூறி வரும் நிலையில் இந்த நோய் தொற்று காற்றில் பரவும் தன்மையுடையது என்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேட் திறந்திருந்ததா? மூடப்பட்டு இருந்ததா? வேன் டிரைவர், ரயில்வே நிர்வாகத்தின் முரண்பாடான தகவல்கள்..!

ஏற்காடு எக்ஸ்பிரஸை கடத்த போறேன்.. முடிஞ்சா புடிங்க! - போலீஸை அலறவிட்ட இளைஞர்!

என் தலைவிதியை ஏன் இப்படி எழுதினாய்? சிவபெருமானுக்கு கடிதம் எழுதி இளைஞர் தற்கொலை..!

ரகசிய கேமராவுடன் ஸ்மார்ட் கண்ணாடி அணிந்து சென்ற பக்தர்.. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் கைது!

கடலூர் ரயில் விபத்தில் இறந்த பள்ளி மாணவர்கள்.. முதல்வர் ஸ்டாலின் நிவாரண அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments