Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 நாட்களுக்கு கொரோனா 2வது அலையின் தாக்கம் !

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (12:01 IST)
கொரோனா பாதிப்பு விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு எஸ்பிஐ ஆய்வு ஒன்றை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் 59,118 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,18,46,652 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்த நிலையில், கொரோனா பாதிப்பு விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு எஸ்பிஐ ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், கொரோனாவின் 2வது அலை வரும் ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது பாதியில் உச்சம் தொடப் போகிறது என்று தெரியவந்துள்ளது.
 
மேலும் பிப்ரவரி 15 ஆம் தேதியில் இருந்து அடுத்த 100 நாட்களுக்கு 2வது அலையின் தாக்கம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேசமயம் தடுப்பூசியானது கொரோனாவை எதிர்கொள்ள முக்கியமான அம்சமாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments