Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் - மக்கள் அச்சம்!

அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்
Webdunia
ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (13:00 IST)
இந்தியாவில் கொரோனா மரணங்கள் திடீரென அதிகரிப்பது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு பின்னர் தளர்வுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.   
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,906 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,41,75,468 ஆக உயர்ந்தது. மேலும் புதிதாக 561 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,54,269 ஆக உயர்ந்தது.
 
இதனிடையே கொரோனா மரணங்கள் திடீரென அதிகரிப்பது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 200 முதல் 300 வரை பதிவாகி வந்த மரணங்கள் தற்போது 500க்கு மேல் சென்றுள்ளது. நேற்று 660 ஆக பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments