இந்தியாவில் 4000ஐ கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு: மத்திய அரசு கவலை..!

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2023 (11:15 IST)
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 4000ஐ தாண்டி உள்ள நிலையில் மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதிலும் கடந்த சில நாட்களாக கொரனோ வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் தினசரி கொரோனா பாதிப்பு 1000, 1500 என்று இருந்த நிலையில் தற்போது படிப்படியாக உயர்ந்து இன்று 4000ஐ தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4435 என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு 23 ஆயிரத்து 91 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
 
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து மத்திய மாநில அரசுகள் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்திய நர்ஸ்.. பிரம்படி தண்டனை கொடுத்த சிங்கப்பூர் நீதிமன்றம்..!

ஒசாமா பின்லேடன் பெண் வேடத்தில் தான் பாகிஸ்தான் சென்றாரா? முன்னாள் சிஐஏ அதிகாரி தகவல்

ஆந்திர பேருந்து தீ விபத்து: ஓட்டுநர் அலட்சியம் தான் விபத்துக்கு காரணமா? அதிர்ச்சி தகவல்..!

தமிழகத்தில் தொடர் கனமழை: சுவர் இடிந்து 2 வயது சிறுமி பரிதாப பலி.. இன்னும் சில உயிரிழப்புகள்..!

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை.. சென்னையில் இன்று சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments