Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதார் ஃபார்முலாவில் கொரோனா தடுப்பூசி: மத்திய அரசின் புதிய திட்டம்!

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (07:11 IST)
கொரோனா வைரஸ் தடுப்பூசி போடுபவர்களுக்கு ஆதார் பார்முலாவை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
தற்போது வைரஸ் தடுப்பூசி போட வருபவர்களுக்கு கருவிழி மற்றும் கைரேகைகளை பதிவு செய்யப்படுகிறது. ஆனால் கைரேகை பதிவு செய்யும்போது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்புள்ளது என்பதால் ஆதார் எண் பார்முலாவை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
 
இந்தத் திட்டத்தின்படி தடுப்பூசி போட வருவதற்குமுன் கோ-வின் என்ற தளத்தில் பதிவு செய்ய வேண்டும். அப்போது தங்களுடைய செல்போன் எண் மற்றும் ஆதார் எண்ணை அந்த செயலியில் பதிவு செய்தால் தடுப்பூசி மையத்துக்கு செல்லும்போது ஆதார் தகவல்கள் மூலம் அவருடைய தகவல்கள் தானாகவே சரிபார்க்கப்பட்டு பின்னர் தடுப்பு ஊசி செலுத்தப்படும்
 
இதன் மூலம் கருவிழி மற்றும் கைரேகைகளை பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதால் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கொரோனா பரவாது என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments