சிறார்களுக்கான கொரொனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடக்கம்!

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (15:51 IST)
சிறார்களுக்கான கொரொனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

6 - 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவசர கால பயன்பாடாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக 6 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் பயன்படுத்துவதற்காக  தடுப்பூசி Corbevax க்கு ஒப்புதல் அளிக்க அரசாங்கக் குழு சமீபத்தில் பரிந்துரைத்தது.

12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ZyCov-D இன் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் DCGI பரிந்துரைத்துள்ளது. ZyCov-D கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்று டோஸ் தடுப்பூசி வழங்குவதற்கான அனுமதியைப் பெற்றது.

குஜராத்தை தளமாகக் கொண்ட Zydus Lifesciences நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ZyCov-D, உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியாகக் கூறப்படுகிறது.

இ  ந் நிலையில்    நாடு முழுவதும் 6 வயது முதல் 12 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு இன்று முதல்           கோவாக்சின்  தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பிரதமரின் அறிவிப்பை தொடர்ந்து மத்திய  சுகாதாரத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments