Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவலும் உள்ள மருத்துவமனைகளில் கொரொனா தடுப்பு ஒத்திகை

Webdunia
திங்கள், 27 மார்ச் 2023 (19:24 IST)
இந்தியாவில் கொரொனா தொற்று வேகம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 7 நாட்களில் மட்டும் இந்த எண்ணிக்கை 78% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

சீனாவில் இருந்து கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்குக் கொரோனா பரவியது. இது அடுத்தடுத்து, 2-வது,3-வது, 4-வது அலையாகவும், உருமாறிய வைரஸாகவும் மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

சமீபகாலமாய குறைந்திருந்த கொரொனா தொற்று இந்தியாவில் மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

இதுகுறித்து அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், கடந்த 7 நாளில் மட்டும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 78% அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் புதிதாக 1890 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இது கடந்த 210 நாட்களில் உருவான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கையாகும். அதேபோல், 19 முதல் 29 சதவீதம் வரை இறப்புகளும் அதிகரித்துள்ளன.

குறிப்பாக அரியானா,  உத்தரபிரதேசம், டெல்லி, குஜராத் கோவா,இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரொனா பரவல் அதிகரித்துள்ளது. எனவே வரும் ஏப்ரல் மாதம்10, 11 ஆகிய தேதிகளில்  நாடு முழுவதிலுள்ள மருத்துவமனைகளில் கொரொனா தடுப்பு ஒத்திகை நடத்த சுகாதார அமைச்சகம் மாநிலங்கள்  மற்றும் யூனியன்களை அறிவுறுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments