Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதி எரிந்த உடலை தூக்கிச் சென்ற உறவினர்கள்! கொரோனாவால் இறந்தவருக்கு இறுதிச் சடங்கு மறுப்பு!

Webdunia
புதன், 3 ஜூன் 2020 (08:33 IST)
கொரோனாவால் இறந்த ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவரின் உடலை எரிக்க விடாமல் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

கொரோனாவால் இந்தியாவில் தினமும் பலபேர் இறந்து வருகின்றனர். அவர்களின் உடலை புதைக்கவோ அல்லது இறுதி மரியாதை செய்யவோ அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மேலும் இறந்தவர்களின் உடலை அரசு அதிகாரிகள் துணையோடு அடக்கமும் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பல இடங்களில் மக்கள் உடல்களுக்கு இறுதி மரியாதை செலுத்த மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இப்போது அது போன்றதொரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் தோடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 72 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்ற ஊரிலேயே அடக்கம் செய்ய முடிவுசெய்துள்ளனர். ஆனால், அப்பகுதியில் மக்கள் ஒரு கும்பலாக சேர்நது உடலை எரிக்க மறுப்பு தெரிவித்து, கற்களால் தாக்கியுள்ளனர்.

இதையடுத்து பாதி எரிந்த நிலையில் உடலை தூக்கி சென்று வேறொரு இடத்தில் எரித்துள்ளனர். இது சம்மந்தமான செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments