Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையை விட 6 - 8 மடங்கு அதிகம்?

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (16:08 IST)
இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு அதிகாரப்பூர்வ எண்ணிக்கையைவிட 6 - 8 மடங்கு அதிகம் என ஆய்வில் தகவல். 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 30,757 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,27,54,315 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையைவிட ஆறு முதல் 8 மடங்கு அதிகமாக இருக்கும் என, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, டெலிகிராப் இந்தியா இணையதளம் தெரிவித்துள்ளது.
 
நவம்பர் 2021 தொடக்கத்தில் 30.2 லட்சம் முதல் 30.7 லட்சம் வரையில், கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஆய்வு மதிப்பிட்டுள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ எண்ணிக்கையின்படி 4,60,000 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த ஆய்வு பிரான்சின் மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இந்திய மக்கள்தொகை நிபுணரான கிறிஸ்டோஃப் கில்மோட்டோவால் மேற்கொள்ளப்பட்டது என்பது கூடுதல் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments