Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் 39 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: இன்றைய நிலவரம்!

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (10:05 IST)
இந்தியாவில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 39 லட்சத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 83,341 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. உலக நாடுகளில் ஒரே நாளில் அதிகமான உறுதியான பாதிப்பு எண்ணிக்கைகளை விட இது அதிகமாகும். 
 
இந்நிலையில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 38,53,406 லிருந்து 39,36,747 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 29.70 லட்சத்திலிருந்து 30.37 லட்சாமாக உயர்வு. உயிரிழந்தோர் எண்ணிக்கை 67,376 லிருந்து 68,472 ஆக அதிகரிப்பு. 
 
மேலும், கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 66,659 பேர் குணமடைந்துள்ளனர், 1,096 பேர் உயிரிழந்துள்ளனர். அக மொத்தம் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 8.31 லட்சம் பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு தோள்பட்டையில் காயம் - வைகோவின் மகன் துரை வைகோ கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பேச்சு...

மருமகளை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்தி கொலை செய்த மாமனார்: என்ன காரணம்?

லேப்டாப்பில் சார்ஜ் போட்ட பெண் மருத்துவர் பரிதாப பலி.. கோவையில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

நான் பொறுப்பேற்ற போது தமிழக பல்கலைக்கழகங்கள் மோசமாக இருந்தது: ஆளுநர் ரவி

முஸ்லீம் இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments