Webdunia - Bharat's app for daily news and videos

Install App

51 லட்சத்தை தாண்டியது கொரோனா; 6 கோடி மாதிரிகள் பரிசோதனை

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (10:21 IST)
இந்தியாவில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 51 லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 97,894 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 51,18,253 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 1,132 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 83,198 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் 82,719 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ள நிலையில் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 40,25,079 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 10,09,976 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியா முழுக்க 6 கோடி கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments