Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறக்குமதி ஐட்டம்: ஷைனாவிடம் மன்னிப்பு கேட்ட உத்தவ் சிவசேனா எம்.பி

Mahendran
சனி, 2 நவம்பர் 2024 (17:43 IST)
இறக்குமதி ஐட்டம் என பெண் வேட்பாளரை தர குறைவாக விமர்சனம் செய்த உத்தவ் தாக்கரே கட்சியின் எம். பி. அரவிந்த் மன்னிப்பு கேட்டதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 மகாராஷ்டிரா மாநிலத்தில் நவம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த பெண் தலைவர் ஷைனா என்பவர் வேட்பு மனுதாக்கலுக்கு ஒரு நாளுக்கு முன்பாக திடீரென ஷிண்டே சிவசேனா கட்சியில் இணைந்தார். அவருக்கு மும்பா தேவி என்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில், எம். பி. அரவிந்த் சாவந்த் இதுகுறித்து கூறியபோது, ஷைனா  ஒரு இறக்குமதி  ஐட்டம் என்றும், மும்பா தேவிக்கு தொடர்பு இல்லாத ஒருவருக்கு சீட் கிடைத்துள்ளதாகவும் விமர்சனம் செய்தார். 
 
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அரவிந்த் சாவந்த் மன்னிப்பு கேட்டு உள்ளார். யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்றும், ஒரு பெண்ணை அவமதித்துவிட்டேன் என்றும், என் வாழ்நாளில் இப்படி யாரையும் நான் விமர்சனம் செய்ததில்லை; நான் ஆபாச அர்த்தத்தில் பேசவில்லை. எனது பேச்சு யாருடைய மனதையாவது புண்பட்டு இருந்தால் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments