Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் மூத்த தலைவர் சுட்டுக் கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்

காங்கிரஸ் மூத்த தலைவர் சுட்டுக் கொலை

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2016 (11:36 IST)
ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் காகா மர்ம கும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.


 


ஹரியானா மாநிலம் ரோடக் நகரைச் சேர்ந்தவர் அசோக் காகா. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான இவர் ஹோடா முதலமைச்சராக இருந்த போது அவரது உதவி யாளராக பணியாற்றியவர்.
 
இந்நிலையில்,  அசோக் காகா ரோடக் நகரில் தனது வீட்டின் அருகே நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
 
அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த 3 மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
 
இதனால், உடலில் குண்டுகள் பாய்ந்த நிலையில் அசோக் காகா ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அந்த கொலை கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
 
இதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவ்ர ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
 
இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் இது குறித்து விசாரடிண நடத்தி வருகின்றனர்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments